Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
இளைஞர்களுக்கு இணைய அறிவியல் தொழில்நுட்பம் கட்டாயம்; எழுத்தாளர் கபிலன் வலியுறுத்தல்
52 days ago
03 Feb 2026
மதுரை: "இன்றைய இளைஞர்கள் இணைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.அதில் ஆளுமை செலுத்தினால் உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும் என, மதுரையில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து வலியுறுத்தினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் பெருவிழா தலைப்பில் ஆகோள் பெட்டகம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன் முன்னிலை வகித்தனர்.
கபிலன் பேசியதாவது:
இந்நாவல் தொடருக்காக 5 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நாம் என்ன உழைக்கிறோம் என்பதை விட நம் உழைப்பு சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பது முக்கியம். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்தில் ஏற் கனவே வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
கபிலன் பேசியதாவது:
இந்நாவல் தொடருக்காக 5 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நாம் என்ன உழைக்கிறோம் என்பதை விட நம் உழைப்பு சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பது முக்கியம். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்தில் ஏற் கனவே வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் சின்னச் சின்ன மயக்கங்களில் தொலைந்து விடாமல், மனதை கட்டுப் படுத்த வேண்டும். இணைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டு ஆளுமை செலுத்தும்போது, உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும். இந்திய அரசியலைக் கூர்ந்து கவனியுங்கள் எதிர்காலம் மிக அருகில் உங்களுக்காக காத்திருக்கிறது. ஆகோள் வாசகர் வட்டம் மூலம் இளைஞர்களுக்கு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம் என்றார்.
முன்னதாக கபிலனின் 25 ஆண்டு இலக்கிய பயணத்தை நினைவு கூரும் வகையில் 'கபி 25' ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
முன்னதாக கபிலனின் 25 ஆண்டு இலக்கிய பயணத்தை நினைவு கூரும் வகையில் 'கபி 25' ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
Namma Madurai
Local News & Updates