மேலுாரில் மாவட்ட உரிமையியல், சார்பு மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் பழமையான சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
இந்நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் கட்ட கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.26) காலை முதல் மதியம் 1:00 மணி வரை அரை நாள் சாலையோர கடைகள், ஜவு , நகை, பாத்திரம் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிப்பதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் திருமேனி, சுரேந்தர், மேகவர்ணன் தெரிவித்தனர்.
Namma Madurai
Local News & Updates