மதுரை: மதுரையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில் உலக தாய்மொழி நாள் கருத்தரங்கு நடந்தது. மன்றத் தலைவர் பி. வரதராஜன் தலைமை வகித்தார். இலக்கியப் மன்றத் தலைவர் கவிஞர் மு. செல்லா முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தகுமார் கருத்தரங்கை துவக்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முத்தையா வரவேற்றார். கவிஞர்கள் பேனா மனோகரன், ஜி. மஞ்சுளா, ரோஜா முத்தையன், ஆண்டிபாண்டி, தமிழ்சிவா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
Namma Madurai
Local News & Updates