Namma Madurai App

Namma Madurai App

மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணிக்கு 2026 பிப்ரவரி வரை அவகாசம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணிக்கு 2026 பிப்ரவரி வரை அவகாசம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

136 days ago 08 Nov 2025

Share this story

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணியை 2026 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் வழங்கியுள்ளது.

மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்தது: புதுமண்டபத்தை புனரமைக்க கடைகள் குன்னத்தூர் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் மண்டபம் இதுவரை புனரமைக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. புனரமைப்பு பணிக்காக ஒருவர் நன்கொடை வழங்க முன்வந்துள்ளார். புனரமைப்பு பணி ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே புனரமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Namma Madurai

Local News & Updates

More News