Namma Madurai App

Namma Madurai App

கோயில் திருவிழாவை முன்னிட்டு - மாட்டு வண்டிப்பந்தயம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கோயில் திருவிழாவை முன்னிட்டு - மாட்டு வண்டிப்பந்தயம்

374 days ago 17 Mar 2025

Share this story

வெள்ளலுாரில் வல்லடிக்காரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாச்சியார் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமலிங்கம் மற்றும் கிராமத்தார் சார்பில் மாட்டுவண்டிப் பந்தயம் நடந்தது.
பாகனேரி ஆனந்த பார்த்திபன், சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் முதல் பரிசு, கம்பம் திருமலை, கோட்டநத்தம் பட்டி மதியழகன் 2 ம் பரிசு, மணவாக்கிப்பட்டி வாசுதேவன், வெள்ளலுார் நிரஞ்சன் 3 ம் பரிசு, சூரத்துார் பட்டி இளவரசு, போடி வெண்ணிலா மாடுகள் 4 ம் பரிசை வென்றன.
பெரிய மாடு பந்தயத்தில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் நாட்டரசன் கோட்டை சீதையம்மாள், புலி மலைப்பட்டி முனிசாமி, ஆட்டுக்குளம் குருசாமி, கூடலுார் முருகேசன் ஆகியோர் மாடுகள் முறையே முதல் 4 பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது.

Namma Madurai

Local News & Updates

More News